காதலர் தினம் கொண்டாட பணம் இல்லாமல் ஆடுகளைத் திருடிய இரண்டு வாலிபர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் அருகே மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மனைவி ரேணுகா. இவர் தனது வீட்டு வாசல் முன்பு பட்டி ஒன்று அமைத்து, பத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். 

இந்த நிலையில், நேற்று காலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு ரேணுகா பதறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது இரண்டு வாலிபர்கள் பட்டியில் இருந்த ஆடுகளில் ஒன்றை மட்டும் திருடி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரேணுகா திருடன் திருடன் என்று கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ஆடு திருடிய இளைஞர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

இதையடுத்து போலீசார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தகுமார், கிருஷ்ணாபுரம் பகுதியைச்  மோகன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் நாளை காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பணம் இல்லாததால் ஆட்டை திருடி விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் காதலர் தினத்தை கொண்டாட இருந்ததும் தெரியவந்தது. 

இதைதொடர்ந்து போலீசார் இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர். அத்துடன், அவர்கள் ஆடு திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near vilupuram two youths arrested for goat stole


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->