நெல்லை ரவுடி தீபக் ராஜா கொலை வழக்கு..மேலும் 4 பேர் கைது!! - Seithipunal
Seithipunal


நெல்லை ரவுடி தீபக் ராஜா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நான்கு குற்றவாளிகள் கைது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. நெல்லை மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜா.இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள பிரபல ஹோட்டலில் தனது காதலியுடன் உணவருந்திகொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரதபரிசோதனைக்காக சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள். தீபக் ராஜா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யப்பட்ட பிறகு உடலை வாங்குவோம் என்று கூறி வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நாலு பேரை கைது செய்துள்ளது காவல்துறை.

தனி படை போலீசார் பிடிக்கும் சென்றபோது நவீன் மற்றும் முருகன் என்ற இருவர் தப்பியோட முயற்சி செய்த பொது கீழே விழுந்ததில் இருவருக்கும் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை இந்த இந்த வழக்கு தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellie rowdy Deepak Raja murder case 4 more people arrested


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->