#நெல்லை:: பல் பிடுங்கிய விவகாரத்தால் புதிய எஸ்பி நியமனம்..!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்களில் பற்கள் சினிமா பாணியில் பிடுங்கிய விவகாரம் தமிழகத்தை உலுக்கியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தற்காலிகமாக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது

அதேபோன்று நெல்லை மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வந்த சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு புதிய எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவை மாநகர் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று சென்னை மேற்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்பியாக இருந்த சண்முகம் கோவை மாநகர் துணை கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பாதுகாப்பு அதிகாரியாக குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New SP appointed for Tirunelveli district


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->