ரவுண்டு கட்டிய என்.ஐ.ஏ அதிகாரிகள் - தஞ்சாவூரில் இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழகம் முழுவதும் பன்னிரண்டு இடங்களில் அதிகாலை ஐந்து மணி முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அதன் படி தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தஞ்சாவூரில் அருளானந்தம் நகர், சாலியமங்கலம், மானாங்கோரை உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது, சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் 153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA officers arrest two peoples in thanjavur saliyamangalam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->