என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி... தமிழ்நாட்டில் 20 இடங்களில் தீவிர சோதனை! - Seithipunal
Seithipunal


ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, மயிலாடுதுறையில் 20 உள்ளிட்ட இடங்களில்  என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 20 இடங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, மயிலாடுதுறையில் 20 இடங்களில் என்.ஐ.ஏ.சோதனை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள திருமுல்லைவாசல் பகுதியில் 15 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.

இதேபோல திருமுல்லைவாசலை சேர்ந்த பாசித், எல்லை கட்டிருப்பு தெருவில் வசித்து வரும் சாதிக் ஆகியோரின் வீடுகள் உள்பட 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என தற்போதுவரை தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NIA officials in action Raids at 20 places in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->