இலவசங்கள் தேவைப்படாத குடும்பங்களுக்கு கௌரவ குடும்ப அட்டை - அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக குடும்ப அட்டைகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் ஏழை எளிய குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரசின் இலவசங்கள் தேவையில்லை என்று கருதும் வசதியான குடும்பங்களுக்கு கவுரவ அட்டை வழங்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் அரசால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விளக்கங்களை 9442194480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No free ration card in Pudhuchery


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->