விடாது விரட்டிக் கொட்டிய தேனீக்கள் - ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணந்தூரை அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன், வளர்மதிக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இந்தத் தோப்பில் தென்னை மட்டை உரிப்பதற்காக அதே கிராமத்தை சேர்ந்த கல்யாணி, ஜெயலட்சுமி , சின்னசாமி உள்ளிட்ட மூன்று பேர் சென்றுள்ளனர். 

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மலை தேனீக்கள் கூட்டம் மூன்று பேரையும் கடித்துள்ளது. இதனால் 3 பேரும் அலறியடித்து, அருகே இருந்த பேருந்து நிலையத்தில் மறைவதற்க்காக ஓடியுள்ளனர். ஆனால், மூன்று பேரையும் விடாமல் துரத்திச் சென்ற தேனீக்கள், பேருந்து நிலையத்தில் இருந்த பெரியசாமி, காந்தி உள்ளிட்ட இருவரையும் சேர்த்து கொட்டியுள்ளன.

இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள நான்கு பேரும் வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டு ஓடியுள்ளனர். இந்தச், சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீப்பந்தம் கொண்டு வந்து தேனீக்களை விரட்டி அடித்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலை தேனீக்கள் கொட்டியதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one man died and four peoples injured for bee bite in krishnagiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->