நடுவழியில் நின்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையிலிருந்து காரைக்குடிக்கு 18 பெட்டிகளுடன் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வருகிறது. இந்த ரெயில் வழக்கம் போல் இன்று அதிகாலை 5.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. 

இந்த நிலையில், இந்த ரெயில் பள்ளத்தூர் அருகே செட்டிநாடு பகுதியில் காலை 5.45 மணிக்கு சென்றபோது கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் திடீரென பிரேக் பைண்டிங் பழுதானதால் புகை வந்தது.

இதையறிந்த ஓட்டுநர் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக ரெயிலை நிறுத்தினர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து டிரயில்வே ஊழியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி ரயில்வே பொறியாளர்கள் விரைந்து வந்து பழுதை சரி செய்தனர். 

இதையடுத்து, ரெயில் 55 நிமிடங்கள் தாமதமாக காலை 6.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் சிரமமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pallavan express stop mid way for brake problam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->