மக்களுக்கு எச்சரிக்கை! சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரியாவில் உள்ள ஹேமா என்ற நகரில் இருந்து கிழக்கு 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 சிரியா நாட்டின் தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்ததாவது, 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஹமா மட்டுமன்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நில நடக்கும் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு 9:56 மணியளவில் நில நடக்கும் மேற்பட்டதாக தகவல் வெளியேறி உள்ளது.

இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் 3.7 ரிட்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இடைநிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னோடியாக இருக்கலாம்.

அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People should also be aware that there is an earthquake in Syria


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->