அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ் - எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் : அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், விவசாயி நலனை கருத்தில் கொண்டு அதிமுக ஆட்சியில் நீர்நிலைகளை தூர்வாரப்பட்டது. குருவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய ஏற்பாடு வழங்கவில்லை. குருவை விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயத்தை  இரும்புகரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இதுவரை அதிமுகவை காப்பாற்றியது யார் என்று சசிகலாவிற்கு கேள்வி எழுப்பினார். அதிமுகவில் ஒரு ஜாதி ஆதிக்கம் செலுத்துவதாக சசிகலா எப்படி சொல்கிறார். அதிமுகவில் எல்லா ஜாதியினரும் அனைத்து பொறுப்புகளிலும் உள்ளனர் அதிமுகவில் எந்த சரிவும் இல்லை. 

2021ல் அரசியல் ஓவியம் எனக் கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்? இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிட்ட ஓபிஎஸ்ஐ எப்படி கட்சியில் சேர்க்க முடியும். அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ். மத்திய அமைச்சராகலாம் என்று சுயநலத்தில் பாஜகவில் இருந்து போட்டியிட்டவர் ஓபிஎஸ். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

person who has never been loyal to AIADMK is OPS Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->