பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர் கைது..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே உடன்குடியில் சல்மா என்ற தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்த பொன்சிங் என்பவர் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு மாணவிகளை அழைத்து சென்றபோது அவர்களுக்கு மதுகொடுத்து பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். 

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், கோவையில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் இன்று கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட பொன்சிங் திருச்செந்தூர் அழைத்து வரப்பட உள்ளார். இதற்கு முன்னதாக, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பொன்சிங்கை வேலையை விட்டு உடனடியாக நிறுத்திவிட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pet teacher arrested for harassment case in thoothukudi udankudi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->