சென்னையில் இன்று 2-ம் கட்ட சோதனை ஓட்டம்...! டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்....!!!
Phase 2 trial run Chennai today Driverless Metro Rail
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

இதன் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது, 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப்பணிகள்,ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
மேலும், பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் இந்த ரெயில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கு முன்பு, கடந்த மாதம் 20-ந்தேதி இந்த தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.மேலும், 2.5 கிமீ தூரத்துக்கு 25 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
English Summary
Phase 2 trial run Chennai today Driverless Metro Rail