திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்! மாஸ்டர் பிளான்! வெட்டும்போது தடுத்தால் நாட்டு வெடிகுண்டு! - Seithipunal
Seithipunal


சென்னை : ஆம்ஸ்ட்ராங்கை வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் குற்றவாளிகள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல்  ஆம்ஸ்ட்ராங்கை  சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் அடங்கிய கும்பலிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கொலையாளிகள் கழுத்தில் வெட்டி உள்ளனர். கணுக்காலில் வெட்டி நிலை குலைய செய்த பின்னரே  சரமாரியாக கொலையாளிகள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

கொலையாளிகள் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கின் இடது கன்னத்தில் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு கொலையாளிகள் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plan was to kill Armstrong with a homemade bomb if he tried to stop him during the cut


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->