பிளஸ்-1 மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.! காதலன் உட்பட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (21). இவருக்கும், பதினோராம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திகேயன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அவரது நண்பர்களான ஆதித்யா, ஹரிதாஸ் ஆகிய இரண்டு பேருடன் சேர்ந்து கார்த்திகேயன் மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் ஆன ஆதித்யா, ஹரிதாஸ் ஆகிய 3 பேரையும் போகோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plus 1 girl gang raped including her boyfriend 3 arrested in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->