தமிழகம் வரும் பிரதமர் மோடி! ஒரே மேடையில் இபிஎஸ், ஸ்டாலின்? வெளியான உறுதியான தகவல்!
PM Modi TN visit Pamban New railway bridge
தென்கிழக்குப் பகுதியில் புனித நகரமாக விளங்கும் ராமேசுவரத்திற்கு, தினமும் பல பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகை தருகிறார்கள். இந்த நகரத்தை, மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலம் 1914ல் கட்டப்பட்டது. 2.3 கி.மீ. நீளமுள்ள இப்பாலம், இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையை உடையதாகும்.
கப்பல்கள் செல்ல வசதியாக, பாலத்தின் நடுவில் கத்திரி வடிவ தூக்குப்பகுதி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், 2022ல் கடல் அரிப்பினால், பாலத்தின் ஷெர்ஜர் தூக்கு பகுதி சேதமடைந்து, ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
இந்த இடரினை சமாளிக்க, 2020ல் ரூ.546 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. புதிய பாலம் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, 650 டன் எடையுள்ள செங்குத்து தூக்கு பாலம் அடங்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் அல்லது மூன்றாம் வாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி புதிய பாலத்தை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளார். தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், உயர் அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளனர். இறுதியாக, ஏப்ரல் 3-வது வாரத்தில் பாலம் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மோடி ராமேசுவரம் வருகை அரசியல் ரீதியாக பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்த பிரதமரின் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
PM Modi TN visit Pamban New railway bridge