தைரியம் இருந்தா வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கைவைத்து பார் - மரு. அன்புமணி போர் முழக்கம்.! - Seithipunal
Seithipunal


உனக்கு தைரியம் இருந்தால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து வடமாவட்டத்தில் பேசவேண்டியது தானே. இட ஒதுக்கீடை இரத்து செய்ய விட்டுவிடுவோமா? என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அனல்பறக்க பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மயிலம் தொகுதி பாமக வேட்பாளர் சிவகுமார் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், "  

வடமாவட்டத்தில் பிரச்சாரம் செய்கையில் மு.க ஸ்டாலின் எதுவும் பேசாமல் பிரச்சாரம் செய்தார். போடிக்கு சென்ற மு.க ஸ்டாலின் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை எதிர்த்து பேசியுள்ளார். வடமாவட்டத்தில் ஒன்றும் பேசாமல், தென்மாவட்டத்தில் சென்று பேசுகிறார். உனக்கு தைரியம் இருந்தால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து வடமாவட்டத்தில் பேசவேண்டியது தானே. இட ஒதுக்கீடை இரத்து செய்ய விட்டுவிடுவோமா?. 

கோழைத்தனமான பேச்சுக்கள் எதற்கு?. ஸ்டாலினுக்கு திராணி இருந்தால் அரசியல் களத்தில் என்னுடன் மோதிப்பாருங்கள். கோழைத்தனமாக, சகுனித்தனமாக மாவீரனின் பிள்ளைகளை வைத்து மூளைச்சலவை தரக்குறைவான அரசியல் செய்ய வேண்டாம். மாவீரனின் பிள்ளைகள் எனது பிள்ளைகள். நேரடியாக எந்த பிரச்சனையும் திமுக கையாலாது. நாங்கள் எதையும் நேரடியாக எதிர்ப்போம். நமது கூட்டணி பெண்களுக்கு பாதுகாப்பான கூட்டணி. நமது கூட்டணி அனைவருக்கும் பாதுகாப்பான கூட்டணி " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Speech about Stalin Against Vanniyar Reservation 1 April 2021


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->