உளுந்தூர்பேட்டை கொடூரம்! பலியான 5 உயிர்கள் - டாக்டர் இராமதாஸ் விடுத்த அறிவுரை! - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டை சாலைவிபத்தில்  6 பேர்  உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மக்கள் தங்களின் அதிகாலை பயணத்தை தவிர்க்க அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே  மூடுந்து  சாலையோர மரத்தில் மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.  

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களுக்கு உயரிய மருத்துவம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாலை நேரத்தில் ஓட்டுனருக்கு ஏற்பட்ட உறக்கம் தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதிகாலை பயணம் மிகவும் ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் மகிழுந்து, மூடுந்து போன்றவற்றில் இரவு 12 மணிக்கு மேல் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத தருணங்களில் தொடர்வண்டி, பேருந்து ஆகியவற்றில் பயணிக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் கொட்டு கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss condolence Ulundurpet Car Accident


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->