பட்டாக்கத்தியுடன் சுற்றிவந்த மாநில கல்லூரி மாணவர்கள்! கைது செய்து சிறையில் அடைப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை பாரிமுனையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலை அருகே சிலர் கத்தியுடன் சுற்றி தருவதாக வடக்கு கடற்கரை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து சோதனை செய்வதற்காக அங்கு சென்ற போலீசார் அங்கு கத்தியுடன் சுற்றித் திரிந்த மூன்று பேரை மடக்கி விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மாநில கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சாமுவேல், மீஞ்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும் அவர்களுடன் கும்மிடிபூண்டி பெருமாள் கோவிலை சேர்ந்த லோகேஷ் என்பவர் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது அதிகரித்து வருகிறது. இந்த வகையில் இவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு பிறகு பகையாக மாறி உள்ளது. இதனால் அவர்களை கொலை செய்வதற்காக கத்தியுடன் திரிந்து வந்ததாக தெரிந்துள்ளது.

மூன்று பேரிடம் இருந்தும் 2:30 அடி நீளம் உள்ள பெரிய பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கைதான மூன்று மாணவர்கள் மீதும் ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனடியாக அவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested three college students who were roaming around with knives Chennai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->