மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொடக்கபள்ளி ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


தொடக்க பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கொட்டகுடி கிராமத்தில்  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முத்தமிழ்செல்வன் என்பவர் ஐந்தாண்டுகளாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால், மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவர் மீது போக்சோ வழக்குபதிவு செய்யபட்டது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police have arrested a teacher who sexually harassed elementary school students


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->