ஏப்ரலில் இலங்கைக்கு பிரதமர் மோடி விஜயம்; சம்பூர் சூரிய மின் நிலையத்தை திறந்து வைக்கவுள்ளதாக தகவல்..!
Prime Minister Modi will visit Sri Lanka in April
பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனை இலங்கையின் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயக இந்தியா வந்திருந்த போது, பிரதமர் மோடிக்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுகையில், போது ''நாங்கள் அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறோம். இந்தியாவுக்கான எங்களுடைய முதல் மூலோபாய சுற்றுப் பயணத்தின்போது இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.'' என தெரிவித்து இருந்தார்.

அத்துடன், இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும்போது, இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது என்றும், தேசிய நலனை பேணும் விதமாக வெளிநாட்டு கொள்கையில் எந்தவொரு நாட்டிற்கும் ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக செயல்படுவோம் என விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் NTPC-யும் கிழக்கு திருகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையம் கட்ட ஒப்புக்கொண்டன. இந்நிலையில், பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின் போது இந்த சூரிய மின் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து 04-வது முறையாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Prime Minister Modi will visit Sri Lanka in April