திடீர் திருப்பம்.. அந்த செல்போன் எங்கே? முக்கிய புள்ளியை சுற்றி வளைத்த தனிப்படை.!! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம்எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் செல்போன் மாயமாகி இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் ஜெயக்குமாரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரைச்சுத்துப்புதூரை சேர்ந்த செல்வகுமார் என்ற மருத்துவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து செலுத்தும் பிரிவில் செல்வகுமார் பணியாற்றுகிறார்

ஜெயக்குமாரின் கடிதத்தில் செல்வகுமாரின் பெயரும் இருந்த நிலையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜெயக்குமாரின் கடிதத்தில் பல காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் மற்றும் முக்கிய நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதால் தனிப்படை போலீசார் அவர்களிடமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigate Jayakumar relation selvakumar


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->