சீமான் இல்லம் நோக்கி செல்லும் நாதகவினருக்கு அனுமதி மறுப்பு.!  - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் சீமான் மீது 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே வருகிற 22-ந்தேதி சீமான் வீடு முற்றுகையிடப்படும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்து இருந்தார். மேலும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்கவும் அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவு முதலே குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சீமான் இல்லம் நோக்கி செல்வதற்கு நா.த.க.வினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனால் சீமான் இல்லம் செல்லும் பாதையிலேயே கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். சீமான் வீட்டிற்கு 200 மீட்டர் தொலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. முற்றுகை போராட்டம் நடத்த வரும் பெரியாரிய அமைப்பினரை கைது செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police permission denied for ntk fans come in seeman house


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->