சோகம்! மனைவியின் தாலியை விற்று ஆன்லைன் சூதாட்டம்! மனைவி திட்டியதால் கணவன் செய்த செயல்! - Seithipunal
Seithipunal


சேலம் : மனைவியின் தாலியை விற்று கிடைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்து விளையாடி பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேலம் மாவட்டம் சின்னமணலி பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் வீட்டில் விசைத்தறி அமைத்து  தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எடப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அங்கமுத்து கடந்த 6 மாதங்களாக ஆன்லைனில் சூதாடி வந்துள்ளார். இதற்காக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்துள்ளார்.

மேலும் சூதாட்டத்தில் பல லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அவர் கடைசி முயற்சியாக மனைவியின் தாலியை விற்று அந்த பணத்தை கொண்டு ஆன்லைனில் சூத்தடி உள்ளார். அந்தப் பணத்தையும் சூதாட்டத்தில் இழந்து உள்ளார்.

இதனால் கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் அங்கமுத்து இறந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த நபர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியதால் இதனால் மனமுடைந்த அங்கமுத்து வீட்டில் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power loom owner commits suicide due to depression after losing money by investing in online gambling


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->