பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத் துறை.! - Seithipunal
Seithipunal


10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி சமீபத்தில் வெளியான நிலையில், பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு தமிழக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 16 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் மார்ச் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது.

மேலும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கான பதிவெண்களுடன் கூடிய மாணவர் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31ம் தேதி வரை தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Public exam online registration on tomorrow


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->