4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

புயல் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை கடற்கரை அருகில் வலுப்பெற்றுள்ளது. ஆந்திரா கடற்கரையை நோக்கி நாளை காலை கடக்கவுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மழை பெய்ய வாய்ப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும்  திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Public holiday 4 districts tomorrow


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->