புதுச்சேரியில் மதுவிலக்கு கொண்டுவர தயார்! முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சட்டசபையில் 2025-26 நிதியாண்டுக்கான ரூ.13,600 கோடி பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான நலத்திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அவர் அறிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற சட்டசபை அமர்வில் புதிய மது ஆலை தொடங்கும் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம்:

🔹 புதிய மது ஆலை மூலம் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்.
🔹 10,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும்.
🔹 பூரண மதுவிலக்கை அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஆதரித்தால், அதற்கும் தனது தலைமையிலான அரசு தயாராக இருப்பதாக விளக்கமளித்தார்.

முதலமைச்சரின் இந்த விளக்கம் புதுச்சேரியில் மதுவிலக்குப் பற்றிய விவாதம் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry CM Mathuvilakku CM Rangasamy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->