புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி காலமானார்! சோகத்தில் டிடிவி!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி இன்று காலமானார். ரமாதேவி புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார்.

அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரமாதேவியின் மறைவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், கழக அமைப்பு செயலாளர்  திருமதி.சாருபாலா R. தொண்டைமான் அவர்களின் மாமியாருமான ராணி திருமதி.ரமாதேவி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukkottai Ramadevi Rani Rajagopala Tondaiman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->