ராமேஸ்வரம் | கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தில் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராமநாதபுரம், மண்டபத்தைச் சார்ந்த மீனவர்கள் கடந்த 15ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக படகில் சேதம் ஏற்பட்டு 5 மீனவர்கள் நீரில் மூழ்கினர். 

அதில் ராமநாதபுரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் (வயது 50) பரக்கத்துல்லா (வயது 45) கலீல் முஹம்மது (வயது 32 ) ஆகிய மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameshwaram drowned sea fishermen families Relief announcement


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->