தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்!
Rameshwaram fishermen strike protest
ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இந்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வருகின்ற 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீனவர்களின் இரண்டு விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுத்து தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கங்களும் மீனவ உறவினர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று, மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி மீனவர்கள் இன்று, யாரும் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் 500 கோடி மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஏராளமானோர் இன்று வேலை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rameshwaram fishermen strike protest