தமிழக மீனவர்களின் காவல் 2 வது முறையாக நீட்டிப்பு! கொந்தளிப்பில் ராமேஸ்வரம்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 22ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். 

கடந்த 23ஆம் தேதி அதிகாலை கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மூன்று விசை படகுகளை சுற்றி வளைத்தனர். 

மேலும் படகில் இருந்த 22 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

15 நாட்கள் காவல் முடிந்த நிலையில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களின் காவலை வருகின்ற 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீனவர்கள் காவலை இரண்டாவது முறையாக இலங்கை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ராமேஸ்வம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameshwaram fishermens custody 2nd time extension


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->