அண்ணாமலை மனநல மருத்துவரை அணுக வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள சமயநல்லூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- ”வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை மன அழுத்தத்தில், மனநலம் பாதிக்கப்பட்டது போல் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். 

மனநல மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும். பதவி வெறி மற்றும் மோகத்தினால் மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு சொட்டு வேர்வை கூட சிந்தாத அண்ணாமலை, மனநல மருத்துவரை அணுக வேண்டும். 

அப்படி இல்லை என்றால் நல்ல மருத்துவரை நாங்களே ஆலோசனைக்கு அனுப்புகிறோம். கர்நாடகாவில் சேவை செய்துவிட்டு தமிழினத்தை கேவலமாக பேசியவர் அண்ணாமலை. அண்ணாமலை கழுதையாக கத்தினாலும் தமிழக மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. 

ஆக்டோபஸ் அண்ணாமலை ஒரு கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது. அழிப்பேன் ஒழிப்பேன் என்ற அரசியல் பேச்சு இதுவரை நாங்கள் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை. கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்ற காத்திருந்த கொக்கு.? கடைசியில் குடல் வற்றி செத்துப்போனது போல் அண்ணாமலை கனவும் பொய்த்துப் போகும்” என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RB uthayakumar speech about annamalai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->