பட்டப்படிப்புகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை - ஆர்ப்பாட்டத்தில் அதிரவைத்த ஆர். எஸ். பாரதி.!
rs barathi speech neet protest in chennai
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:- ”நான் படித்தபோது பி.ஏ. படித்தாலே போர்டு வைத்துக் கொள்வார்கள். தற்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. பட்டப்படிப்புகள் என்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை.
![](https://img.seithipunal.com/media/rs barathi-s5ux7.png)
சாதிவாரி ஒதுக்கீட்டினால் தான் எங்களில் பலர் மருத்துவர்கள் ஆனார்கள். எங்கள் பட்டப்படிப்புகள் குலம் கோத்திர பெருமையால் வரவில்லை. எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற தேர்வுகள் வந்துள்ளது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நாய் கூட பட்டம் வாங்குகிறது என்று ஆர்.எஸ் பாரதி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவருடைய பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, ஆர்.எஸ் பாரதி தரம் தாழ்ந்து பேசி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
rs barathi speech neet protest in chennai