சேலத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய கண்டெய்னர் லாரி! துப்பாக்கி சூடு! 100 போலீசார் குவிப்பு!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் அருகே 4 இரு சக்கர வாகனம், ஒரு காரை இடித்துச் சென்ற கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னர் லாரியை தொடர்ந்து பின் சென்றனர்.

பின்னர் சேலம் மாவட்டம், சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர். முதல் கட்ட தகவலின் படி கண்டெய்னர் லாரியில் கட்டு கட்டாக பணமும், ஒரு சொகுசு கார் ஒன்றும் இருந்ததாக தெரிய வருகிறது. 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை பார்ப்பதற்காக 500க்கும் மேற்பட்ட மக்கள் அந்த இடத்தில் கூறியதால், சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டெய்னர் லாரியில் இருந்த நபர்களில் ஒருவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மொத்தம் 7 பேர் இந்த கண்டெய்னர் லாரியில் இருந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட இந்த லாரியில் இருந்தவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Robbery Larry TN Police Gunfire


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->