கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை - சாட்டை துரைமுருகன் மீது பதியப்பட்ட வழக்கு விவரம்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பாளரும், பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகனை என்று குற்றாலத்தில் வைத்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த அவதூறாக துறைமுருகன் பேசியதாக திமுக தரப்பில் புகார் செய்யப்பட்டிருந்தது. 

மேலும் தற்போதைய தமிழக அரசையும் தரக்குறைவான வார்த்தைகளால் துரைமுருகன் விமர்சித்ததாக திமுக தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த புகாரின் பெயரில் இன்று குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே துரைமுருகன் பயன்படுத்திய சண்டாளன் என்ற வார்த்தை பட்டியல் இன மக்களில் உள்ள ஒரு பிரிவு சாதியினரின் பெயர் என்று என்பது தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் சண்டாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sattai Duraimurugan case under 5 sections case file


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->