31 நாட்களில் 133 படுகொலைகள்! பகீர் கிளம்பிய சீமான்! உண்மையான குற்றவாளிகள் இல்லை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் மக்கள் பார்வைக்காகவும் அஞ்சலி செலுத்துவதற்க்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர்  ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், இப்படி ஒரு சூழல் வரும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. சரண் அடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman said that 133 massacres have taken place in Tamil Nadu in the last 31 days


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->