2026 சட்டசபை தேர்தல்... யார் என்பது தெரியும்! -  செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, மதுரை நகர் பகுதிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் உயர்மட்ட மேம்பாலங்கள் சாலை வசதி போன்ற 8,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செய்திருக்கிறோம். ஆனால் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் திமுக மதுரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. 

மதுரையில் உள்ள திமுக அமைச்சர்கள் இரண்டு பேரும் மதுரைக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீதி வீதியாக சென்று வாக்குகளை கேட்டார். ஏழைகளின் மருத்துவர் மக்களின் மருத்துவர் என தெரிவித்தோம். அவரது மருத்துவமனைக்கு சென்றால் இலவசமாக ஊசி போட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தோம். 

ஆனால் மதுரை மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் ஒரு நிலைப்பாட்டை கடைபிடித்து உள்ளனர். இந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு பரிசாக மின்கட்டண உயர்வை திமுக அரசு மக்களுக்கு அளித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கருப்பு சட்டை போட்டுக்கொண்டு போராட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சாணக்கியர் என்பதை தேர்தல் வெற்றி மூலம் நிரூபித்து காட்டுவோம். மின்கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 23ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை அதிமுக நடத்த உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju says Edappadi Palaniswami prove chanakya


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->