செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! உடல் நலக்குறைவால் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


கடந்தாண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இது குறித்த வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதிலேயே சுமார் இரண்டு மாதம் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு வழியாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் இந்த வழக்கு விசாரணை செய்து கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில் இடையீட்டு மனுவாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு நடைபெற இருந்தது.

இதற்கிடையே நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு வருகின்ற 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

செந்தில் பாலாஜி உடல் நல குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்த நிலையில், இதனை ஏற்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji ED case hearing july 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->