செப்டிக் டேங்க் விஷவாயு தாக்குதல்: தொழிலாளி பலியானால் வீட்டின் உரிமையாளர் தான் இழப்பீடு தரவேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
septic tank poison gas attack death case Madras High Court
சென்னையைச் சேர்ந்த யோகேஷ்பாபு, தனது பகுதியில் கழிவுநீர் இணைப்பு இல்லாததால் செப்டிக் டேங்க் கட்டியதாகவும், அதை சுத்தம் செய்யும் போது மாநகராட்சி ஊழியர் உயிரிழந்ததால் இழப்பீடு கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும், தனது சொந்த பணத்தில் இருந்து அவரது குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் கொடுத்ததாகவும், இப்போது முழு இழப்பீடும் தரக் கோரி நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதமானது என்றும் யோகேஷ்பாபு குறிப்பிட்டுள்ளார்.
மாநகராட்சி தரப்பில், தனியார் செப்டிக் டேங்கில் விபத்து ஏற்பட்டால் உரிமையாளரே பொறுப்பு என்றும், உரிய விதிகளின்படியே நோட்டீஸ் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்துகு நீதிபதி, "ஒரு தனிநபரின் இறப்புக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்பாகியுள்ளார். எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்" என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
English Summary
septic tank poison gas attack death case Madras High Court