அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி.. ஒரே நாளில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

உடனே அனைவரும் சிகிச்சைக்காக தியாகதுருகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து 7 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்த போது, எலி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், குடிநீர் மூலம் ஏற்பட்ட தொற்று காரணமாக இவர்களுக்கு எலி காய்ச்சல் பரவியது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து வடதொரசலூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியும், கிருமிநாசினி தெளிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples admitted hospital for rat fever


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->