திண்டுக்கல் || கல்லூரி வளாகத்தில் முறிந்து விழுந்த மரம் - 7 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய நீதிமன்ற வளாக கட்டிடத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமான செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று வார விடுமுறை என்பதால், மாணவ, மாணவிகளை சந்திப்பதற்காக அவர்களது உறவினர்கள் விடுதிக்கு வருகை தந்திருந்தனர். அப்போது அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு மாணவி உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை உடனடியாக மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். 

அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seven peoples injured for tree fell down in dindukal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->