தை அமாவாசை - சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


உலக புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கிவரும் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் மற்றும் அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுடைய திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய முதல் மூன்று அமாவாசையில் ஒன்றான தை அமாவாசை வரும் 29-ம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் பேருந்துகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து தங்களுடைய முன்னோர்களுக்கு அக்னி தீர்த்தம் கடற்கரையில் திதி, தர்ப்பணம் கொடுத்து விட்டு பின்பு ராமநாதசுவாமி கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடிவிட்டு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்வார்கள்

இதனை முன்னிட்டு போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் படி வருகின்ற 28-ம் தேதி சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

அதாவது, கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இதேபோல் வரும் 29-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

special bus run in tamilnadu for thai amavasai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->