இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!....16 தமிழக மீனவர்கள் விசைப்படகுகளுடன் கைது! - Seithipunal
Seithipunal


நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேர் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்பனையினர் சிறைப் பிடித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருவது வாடிக்கையாகி வரும்  நிலையில், இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தும், இதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை கடந்த மாதம் இலங்கை கடற்படையினர் மொட்டை அடித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், எல்லைத் தாண்டி பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேர் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்பனையினர் சிறைப் பிடித்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அட்டுழியத்திற்கு தமிழக அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri lankan navy serial atrocity 16 tamil nadu fishermen arrested with boats


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->