நீலகிரி கோடை விழா நிறைவடைந்தது.. உற்சாகமாக கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்..! - Seithipunal
Seithipunal


கோத்தகிரியில் நடந்துவந்த கோடைவிழா நேற்றுடன் நிறைவுற்றது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் வருடாவருடம் கோடைவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில், இந்த வருடத்திற்குகான  62-வது பழக்கண்காட்சி கடந்த 28-ந் தேதி தொடங்கியது. இந்த விழாவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல உருவங்கள் உருவாக்கப்பட்டன.

இதில், 1 டன் திராட்சை பழங்களை கொண்டு 12 அடி நீளம், 9 அடி உயரத்தில் கழுகு உருவம் உருவாக்கப்பட்டு இருந்ததை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தப்பட்டன.நீலகிரியில் கோலாகலமாக நடைபெற்று வந்த கோடை விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த இரண்டு நாட்களில் சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பழகண்காட்சியை கண்டுகளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Summer Festival Ends


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->