தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. 

கேரள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வருகின்ற 26 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 

இது 27ஆம் தேதி மேற்கு-வட மேற்கு திசைகளில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று, நாளை கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக கடல் பகுதியை நோக்கி, அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நகர்ந்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். 

சென்னை அருகே புதிய புயல் சின்னம் மையம் கொண்டால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுச்சேரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu 2 days heavy rain


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->