3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுகிறது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது. 

கடந்த 5 மாதத்திற்கு பிறகு சென்னையில் 2 நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu 3 districts heavy rain 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->