அரசு டாக்டர்களின் அதிர்ச்சி வைத்தியம்.. மே 29 முதல் தொடர் போராட்டம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் பொழுது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அதிக பணிச்சுமை வழங்கப்படுவதாகவும், ஊதிய உயர்வு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை மூலம் சமூக உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் வருமே 29ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் அனைத்து அரசு மருத்துவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரப்பக் கோரி வருமே 29ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu govt doctors strike from May29


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->