தமிழகத்தில் பள்ளி மாணவிகள் உட்பட 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை! 40 நாளில் 5 அடுத்தடுத்த சம்பவங்கள்!  - Seithipunal
Seithipunal


கடந்த 40 நாட்களில் தமிழகத்தில் பள்ளி மாணவிகள் உட்பட ஐந்து பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை தமிழகத்தில் அடுத்தடுத்து இப்படியான கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 1 

தஞ்சை, ஒரத்தநாடு பகுதியில் 23 வயது இளம் பெண்ணை, 16 வயது சிறுவன் உள்ளிட்ட ஆறு நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த வழக்கில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் எந்த பதற்றமும் இல்லாமல் வந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சம்பவம் 2 

திருச்சி மாவட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஷின் ஓட்டுநராக இருந்து வருவதாக கூறி, பள்ளி மாணவியை நாடக காதல் மூலம் ஏமாற்றி, தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிலம்பரசன் என்பவர் மீது பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் இந்த கும்பல் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே சிலம்பரசன் அமைச்சரின் ஓட்டுநர் இல்லை என்று அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை கைது நடவடிக்கை இல்லை என்று சொல்லப்படுகிறது.

சம்பவம் 3

தஞ்சை மாவட்டத்தில் பேருந்துக்காக காத்திருந்த 45 வயது பெண்ணை, லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று, பிரவீன் அவரின் நண்பர் ராஜ்கபூர் என்ற இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். 

இந்த வழக்கில் அந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

சம்பவம் 4

சென்னை அருகே தாழம்பூர் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற பதினோராம் வகுப்பு மாணவியை, பக்கத்து வீட்டில் வசித்த இரண்டு 16 வயது சிறுவர்களும், சுந்தர் என்ற இளைஞரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில், மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது. 

சம்பவம் 5

சிவகங்கை மாவட்டத்தில் தகாத உறவில் முந்திரி தோப்பில் கள்ளக் காதலனுடன் இருந்த இளம் பெண்ணை, மது அருந்த வந்த ஐந்து பேர், கள்ளக்காதலனை அடித்து துரத்தி விட்டு, கூட்டு பாலில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முத்து குமார் தப்பி ஓடும்போது காலில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu last 40 days 5 Gang Abuse case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->