நீட் தேர்வில் குளறுபடி.? போராட்டம் நடத்திய மாணவர்கள் அதிரடி கைது! தஞ்சையில் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


நீட் நுழைவு தேர்வு முடிவு கடந்த சில நாட்கள் வெளியானதை தொடர்ந்து தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது. 

அந்த வகையில் இன்று நீட் தேர்வை கண்டித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய அரசின் கலால் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தலைமையில் ஏராளமான மாணவர்கள் திரண்டனர். 

பின்னர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பி கலால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்திய போது மாணவர்களுக்கும் போலீசருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 21 மாணவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tanjore students protest cancel NEET exam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->