ஓசூர் || நடுரோட்டில் மாணவியை தாக்கிய ஆசிரியர் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் நடுரோட்டில் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 23ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், பங்கேற்றபோது மாணவி ஒருவர் ஆசிரியையின் கை கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் அவர் மீது ஆசிரியர் சரமாரி தாக்குதல் நடத்தினார்.

இந்தத் தாக்குதலில் மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

teacher attack student in hosur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->