சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை - தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம்..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்தப்பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்த பிரகதீஸ்வரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் மதுபோதையில், சிறப்பு வகுப்புக்கு வந்திருந்த ஒரு மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 

இதையடுத்து வீட்டிற்குச் சென்ற அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் படி போலீசார் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் பிரகதீஸ்வரனை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், தற்காலிக தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரன் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

teacher dismiss in salem for harassment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->